என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
Byமாலை மலர்18 Dec 2018 9:42 AM GMT (Updated: 18 Dec 2018 9:42 AM GMT)
பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்திக்கு போடப்பட்டுள்ள தடைகளை தகர்த்தக்கோரி சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி, அச்சம் தவிர்த்தான், திருவேங்கடம், திருவேங்கடபுரம் ஆகிய கிராமங்களில் பட்டாசு ஆலையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் செயலாளர் ஜெயக்குமார், மாதர்சங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்திக்கு போடப்பட்டுள்ள தடைகளை தகர்த்தக்கோரி சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி, அச்சம் தவிர்த்தான், திருவேங்கடம், திருவேங்கடபுரம் ஆகிய கிராமங்களில் பட்டாசு ஆலையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் செயலாளர் ஜெயக்குமார், மாதர்சங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X