என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மனைவியின் அழகை வர்ணித்ததால் தகராறு- லாட்ஜில் டிரைவரை அடித்து கொன்ற நண்பர் கைது
பழனி:
ஊட்டி அருகில் உள்ள இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது27). தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந் தேதி தனது நண்பரான பாரதி (வயது33) உடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். மது அருந்தி பேசிக்கொண்டிருந்தபோது பாரதி, உன் மனைவி மிகவும் அழகானவர். அவரிடம் தகராறு செய்யாதே. உன்னைப்போல் எனக்கு மனைவி கிடைத்திருந்தால் அவரை அருமையாக வைத்திருப்பேன் என வர்ணித்து பேசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் என் மனைவியை பற்றி எப்படி என்னிடமே வர்ணித்து பேசலாம் என கேட்டு தகராறு செய்தார். இதனால் பாரதி அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாரதி உறவினர்களுக்கு போன் செய்து ராமச்சந்திரன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினார். இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ராமச்சந்திரனின் சகோதரர் வாசுதேவன் தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து கோவை அரசு மருத்துவர்களால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
பாரதியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டர். இதனையடுத்து போலீசார் கொலை வழக்குபதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்