search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி
    X

    உளுந்தூர்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னமாரன் ஓடையை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 53). தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குண மாகவில்லை.

    இதனால் மைக்கேலை அவரது உறவினர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மைக்கேல் பரிதாபமாக இறந்தார்.
    Next Story
    ×