என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோட்டில் விடுமுறை கேட்டு ஆம்புலன்சில் வந்த அரசு பஸ் டிரைவர்
ஈரோடு:
ஈரோடு காஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது35). இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பாபு தமிழக போக்குவரத்து கழகத்தில் கடந்த 5 வருடமாக பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் பாபுக்கு நேற்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பாபு மனைவி மலர்கொடி சென்னிமலை ரோடு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கிளை மேலாளரிடம் நடந்த விவரங்களை கூறி கணவருக்கு விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் கிளை மேலாளர் விடுமுறை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று பாபு தனது மனைவியுடன் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்துக்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பாபு தனது மனைவியுடன் துணை மேலாளர் அறைக்கு சென்று துணை மேலாளரை சந்தித்து விடுமுறை கடிதத்தை கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திரும்பி சென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்