என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை கருப்பாயூரணியில் அரசு அதிகாரி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்11 Dec 2018 10:11 AM GMT (Updated: 11 Dec 2018 10:11 AM GMT)
அரசு அதிகாரி வீட்டில் 36 பவுன் நகை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜா (வயது 31). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டில் வேலை பார்த்த சிவகங்கை நடராஜபுரத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோசப்ராஜா தனது வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 36 பவுன் நகை மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.
அதில், நகை மாயமானது தொடர்பாக வேலைக்கார பெண் புஷ்பா மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனையூர் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் செந்தில்சேகரன் (34). ஐ.டி. அலுவலகத்தில் பணிபுரியும் இவர், நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் சத்தம் கேட்காத வகையில் பீரோவை திறந்த மர்ம நபர்கள் இதில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜா (வயது 31). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டில் வேலை பார்த்த சிவகங்கை நடராஜபுரத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோசப்ராஜா தனது வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 36 பவுன் நகை மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.
அதில், நகை மாயமானது தொடர்பாக வேலைக்கார பெண் புஷ்பா மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனையூர் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் செந்தில்சேகரன் (34). ஐ.டி. அலுவலகத்தில் பணிபுரியும் இவர், நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் சத்தம் கேட்காத வகையில் பீரோவை திறந்த மர்ம நபர்கள் இதில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X