என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்10 Dec 2018 10:30 AM GMT (Updated: 10 Dec 2018 10:30 AM GMT)
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி:
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள பூமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜீத். பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் ரகுபதி (23) இவரும் விவசாயம் செய்து வந்தார்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பையர்நத்தம் கிராமத்தில் உள்ள இவர்களது உறவினர் வீட்டு கோவிலில் கிடா விருந்து நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று மோட்டார் சைக்கிளில் இருவரும் தருமபுரிக்கு வந்தனர். கிடா விருந்தை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இருவரும் திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது பையர்நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அஜீத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ரகுபதியை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக ரகுபதி இறந்தார். அவரது உடலை குடும்பத்தினர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதை அறிந்த போலீசார் ரகுபதி வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள பூமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜீத். பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் ரகுபதி (23) இவரும் விவசாயம் செய்து வந்தார்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பையர்நத்தம் கிராமத்தில் உள்ள இவர்களது உறவினர் வீட்டு கோவிலில் கிடா விருந்து நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று மோட்டார் சைக்கிளில் இருவரும் தருமபுரிக்கு வந்தனர். கிடா விருந்தை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இருவரும் திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது பையர்நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அஜீத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ரகுபதியை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக ரகுபதி இறந்தார். அவரது உடலை குடும்பத்தினர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதை அறிந்த போலீசார் ரகுபதி வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X