search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வில் இப்போது உள்ள கூட்டணி கட்சிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது- பொன் ராதாகிருஷ்ணன்
    X

    தி.மு.க.வில் இப்போது உள்ள கூட்டணி கட்சிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது- பொன் ராதாகிருஷ்ணன்

    தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் என்றும் நிரந்தரம் கிடையாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #dmk #bjp #pmmodi

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள 46 புதூர் பகுதியில் பாபாஜி யோகி ராம் சுரத் என்பவருடைய தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை பார்வையிட மத்திய மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் இன்று ஈரோடு வந்தார்.

    தியான மண்டபத்தை பார்வையிட்ட மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணைகட்டி விவசாயிகளின் வயிற்றில் அடிக்க கூடாது. எனவே இந்த திட்டத்தை கர்நாடக அரசு முழுமையாக கைவிட வேண்டும்.

    மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள் வரும் போது அதில் பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசை குறை சொல்ல கூடாது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை என்று கூறுகிறார்கள். கேரளாவில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட மோடி தமிழகத்திலும் ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பார்வையிட்டுள்ளனர்.

    தி.மு.க.தலைமையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் இணைந்து பாரதிய ஜனதாவை எதிர்க்க போகிறார்களாம். இதை கேட்டு நகைப்பு தான் வருகிறது.

    ஏனெனில் தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகள் என்றும் நிரந்தரம் கிடையாது. தி.மு.க. பக்கம் அவர்கள் நிரந்தரமாக இருந்ததும் கிடையாது.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #dmk #bjp #pmmodi 

    Next Story
    ×