search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
    X

    ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

    புதிய ஓய்வூதியம் முறையை எதிர்த்தும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் நாளை தொடங்கவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. #jactogeo #jactogeostrikepostponed #jactogeostrike
    மதுரை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு ஆஜரானார்.

    அப்போது அவர், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்வு பெரிதும் பாதிக்கும். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உங்கள் கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பிற்பகல் 1 மணிக்கு அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம் என்றனர்.

    மேலும், தற்போதைய சூழ்நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.



    இதற்கு முன்னர் இதே கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இந்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை செய்திருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக வரும் 10-12-2018 அன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இந்நிலையில், நாளை முதல் தொடங்குவதாக இருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, வக்கீல் லோகநாதன் தொடர்ந்த வழக்கின் மறுவிசாரணையை வரும் பத்தாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். #jactogeo #jactogeostrikepostponed  #jactogeostrike 
    Next Story
    ×