search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானநிலையத்தில் போதை இளைஞர்களை அடித்து உதைத்த ம.தி.மு.க.வினர் - வருத்தம் தெரிவித்தார் வைகோ
    X

    விமானநிலையத்தில் போதை இளைஞர்களை அடித்து உதைத்த ம.தி.மு.க.வினர் - வருத்தம் தெரிவித்தார் வைகோ

    விமானநிலையத்தில் போதை இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் செயலையும் கண்டித்துள்ளார். #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு செல்வதற்காக நேற்று மாலை மெட்ரோ ரெயில் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு சென்றார்.

    மெட்ரோ ரெயிலில் அவருடன் கட்சியினரும் பயணம் செய்தனர். விமான நிலையம் சென்றதும் வைகோ லிப்டில் ஏறினார். அப்போது போதையில் இருந்த 2 இளைஞர்கள் ம.தி.மு.க.வினரை இடித்து தள்ளிவிட்டு வேகமாக லிப்டில் ஏறினர்.

    இதைப் பார்த்ததும் வைகோ லிப்டில் இருந்து இறங்கி நடந்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ம.தி.மு.க.வினர் 2 இளைஞர்களையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் வலிதாங்க முடியாமல் அலறிதுடித்த இளைஞர்கள் இருவரும் வைகோவை சந்தித்து புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து வைகோ அந்த இளைஞர்களிடம் வருத்தம் தெரிவித்தார். கட்சியினரையும் கண்டித்தார். அதேநேரத்தில் போதையில் இருந்த இளைஞர்களிடம் மது குடிப்பதை விடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. #Vaiko

    Next Story
    ×