என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விமானநிலையத்தில் போதை இளைஞர்களை அடித்து உதைத்த ம.தி.மு.க.வினர் - வருத்தம் தெரிவித்தார் வைகோ
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு செல்வதற்காக நேற்று மாலை மெட்ரோ ரெயில் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு சென்றார்.
மெட்ரோ ரெயிலில் அவருடன் கட்சியினரும் பயணம் செய்தனர். விமான நிலையம் சென்றதும் வைகோ லிப்டில் ஏறினார். அப்போது போதையில் இருந்த 2 இளைஞர்கள் ம.தி.மு.க.வினரை இடித்து தள்ளிவிட்டு வேகமாக லிப்டில் ஏறினர்.
இதைப் பார்த்ததும் வைகோ லிப்டில் இருந்து இறங்கி நடந்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ம.தி.மு.க.வினர் 2 இளைஞர்களையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் வலிதாங்க முடியாமல் அலறிதுடித்த இளைஞர்கள் இருவரும் வைகோவை சந்தித்து புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து வைகோ அந்த இளைஞர்களிடம் வருத்தம் தெரிவித்தார். கட்சியினரையும் கண்டித்தார். அதேநேரத்தில் போதையில் இருந்த இளைஞர்களிடம் மது குடிப்பதை விடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. #Vaiko
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்