என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் ஜெயிலில் உள்ள நளினி ரூ.1000 கஜா புயல் நிவாரண உதவி
வேலூர்:
கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை இழந்தும், மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.
பல ஆயிரம் ஏக்கர் வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல்வேறு தரப்பில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருட்கள், உணவு ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். மேலும் நிவாரண நிதியும் வழங்கி வருகின்றனர்.
வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். நளினி ஜெயிலில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். கைதிகளுக்கான துணிகளை தினமும் தைத்து கொடுக்கிறார்.
இதன் மூலம் கடந்த மாதம் ரூ.1000 கூலி வாங்கினார். அந்த பணத்தை ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாளிடம் நிவாரணத்துக்கு அளிக்கும்படி வழங்கினார். அதனை சிறைத்துறை மூலம் அனுப்பி வைத்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நளினியின் வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Nalini #Gajastorm
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்