என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ சந்தானம் மரணம்- நாளை உடல் அடக்கம்
Byமாலை மலர்24 Nov 2018 5:54 AM GMT (Updated: 24 Nov 2018 5:54 AM GMT)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானம் இன்று மரணம் அடைந்தார்.
மதுரை:
பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.சந்தானம் (வயது 80). தமிழ் மாநில தலைவராக பதவி வகித்த சந்தானம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.
சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், உசிலம் பட்டி அருகே மேலப்பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இந்த நிலையில் இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சந்தானம் உடல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேலப்பெருமாள் பட்டியில் அடக்கம் செய்யப்படுகிறது. மரணமடைந்த சந்தானத்துக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.சந்தானம் (வயது 80). தமிழ் மாநில தலைவராக பதவி வகித்த சந்தானம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.
சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், உசிலம் பட்டி அருகே மேலப்பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இந்த நிலையில் இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சந்தானம் உடல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேலப்பெருமாள் பட்டியில் அடக்கம் செய்யப்படுகிறது. மரணமடைந்த சந்தானத்துக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X