search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 சட்டசபை தொகுதி தேர்தலிலும் வெற்றி பெறுவோம்- சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
    X

    20 சட்டசபை தொகுதி தேர்தலிலும் வெற்றி பெறுவோம்- சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

    20 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார். #satturramachandran #dmk #byelection

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி பாராளுமன்றம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் குழந்தை தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் மல்லி, ஆறுமுகம், முனியாண்டி, நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    பொதுமக்கள் நம்மீது கோபமாக உள்ளனர். இவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் இந்த ஆட்சியை ஏன் மாற்றவில்லை என்று கேட்கிறார்கள்.

    தி.மு.க. கொள்கை மிக்க கட்சி. எதையும் கொள்கைப்படி தான் செய்யும். யாருக்கும் அடிமையாக இருக்காது. 20 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    மோடி மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் அமையும். அப்போது இந்த அ.தி.மு.க. ஆட்சி தானாகப் போகும்.

    தேர்தலின் போது அ.தி.மு.க. கொள்ளையடித்த பணத்தை கொண்டு வருவார்கள். மத்தியில் இருந்து பணம் வரும். நாம் வெல்வோம்.

    ஒற்றுமையாக இருந்து இதையெல்லாம் முறியடித்து வெற்றி பெற வேண்டும். கலைஞர் இல்லாத நேரம் தளபதி தலைமையில் தி.மு.க. வலுவாக கட்டுக்கோப்பாக உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு காட்ட வேண்டும்.

    அதிலும் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #satturramachandran #dmk #byelection

    Next Story
    ×