என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவை அருகே கணவன்- மனைவி கொலை
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65).
பாலகிருஷ்ணன் மூத்த வக்கீல் ஆவார். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள்.
கணவன் - மனைவி மட்டும் புதுவையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அவருடைய வீடு தரை தளத்துடன் சேர்த்து 3 மாடிகள் கொண்டதாகும்.
இதில் தரைத்தளத்தில் கணவன் - மனைவி வசித்து வந்தனர். முதல் தளம் காலியாக இருந்தது. எனவே வாடகைக்கு விடுவதற்கான அறிவிப்பு பலகையை தொங்க விட்டு இருந்தனர்.
2-வது மாடியில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் முன்பக்க விளக்கு போடவில்லை.
எனவே, மேல் வீட்டினர் விளக்கை போட்டு விட்டு சென்றனர். இன்று காலை அவர்கள் கீழே வந்து பார்த்த போது வீட்டில் யாருமே நடமாட்டம் இல்லாதது போல் இருந்தது.
பாலகிருஷ்ணன் புதுவை முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் ஆவார். எனவே, தேனீ.ஜெயக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் நேரில் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது பாலகிருஷ்ணனும், அவரது மனைவி ஹேமலதாவும் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
யாரோ மர்ம மனிதர்கள் அவர்களை தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்து கொன்று அங்கிருந்த நகை - பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். எவ்வளவு நகை- பணம் கொள்ளை போனது? என்பது தெரியவில்லை.
மேல் மாடியை வாடகைக்கு விடுவது பற்றி அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டு இருந்ததால் வீட்டை வாடகைக்கு கேட்பது போல் வந்து அவர்களை கொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
நேற்று மாலையில இந்த கொலை நடந்திருக்கலாம் எனதெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்