search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த மண்டலம் - டெல்டா பகுதிகளில் பரவலாக மழை
    X

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த மண்டலம் - டெல்டா பகுதிகளில் பரவலாக மழை

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. #Rain

    தஞ்சாவூர்:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை - வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், உள்பட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடி சென்றது.

    புயல் வந்து சென்றதால் வீடுகள், மரங்கள் சேதமாகி பெரும் அழிவை சந்தித்தது. இதனால் மக்களின் அன்றாட பணி பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    இந்த நிலையில் புதிதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் இன்று முதல் வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயல் தற்போது அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதன் தாக்கமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகி வட தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு டெல்டா பகுதி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ஆனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை மேகம் இருள் சூழ்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு லேசான மழை பெய்து அது பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் மாலை வரை மழை வரவில்லை.

    பின்னர் திடீரென லேசான தூரல் விழுந்தது. இரவு வரை லேசான மழை நீடித்து கொண்டே இருந்தது. இன்று காலையுமம் லேசான மழை பெய்தது. பின்னர் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் நேற்று மாலை முதலே லேசான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும் லேசான மழை பெய்தது.

    மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பழையாறு, திருவங்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழையாக பெய்தது. இதைத் தொடர்ந்து திருமருகல் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திட்டச்சேரி, திருச்சங்காட்டங்குடி, மருங்கூர், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே லேசான மழை பெய்தது.

    இன்று காலை பலத்த மழையாக பெய்தது. மேலும் இன்னமும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் எந்த நேரமும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கஜா புயலினால் தங்கள் வீடுகளை இழுந்து நடு தெருவில் நின்று கொண்டிருக்கும் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் தற்போது புதிய காற்றழுத்த மண்டலத்தால் பெய்து வரும் மழை அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறது.

    இதனால் மக்கள் முன் கூட்டியே அத்தியாவசிய பொருட்கள் பால், மெழுகுவர்த்தி, உணவு பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி இருப்பு வைத்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  #Rain

    Next Story
    ×