என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டு ஆய்வு
Byமாலை மலர்18 Nov 2018 9:23 AM GMT (Updated: 18 Nov 2018 9:23 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார். #Gaja
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். குறிப்பாக மின்விநியோகம் விரைவில் கிடைக்கும் வகையில் வெளி மாவட்ட மின் ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்தநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கஜா புயல் நிவாரண நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. 60 ஆண்டுகளாக இல்லாத சேதம். மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின்சாரம் சப்ளை வழங்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் அழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மணமேல்குடி, ஜெகதாபட்டினம், பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டையில் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. இன்றோ நாளையோ அறந்தாங்கியில் மின்சாரம் வழங்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி குடிநீர் வழங்க அறிவுறுத்தி உள்ளோம். தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 200 ஜெனரேட்டர்களை வழங்கி உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான தென்னை, வாழை, தேக்கு, பலா போன்ற மரங்கள் கீழே சாய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
கஜா புயலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சீரமைத்து வருகிறோம். சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் பேசி விவரங்களை கேட்டு வருகிறார். அவரின் உத்தரவின்படி நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று அல்லது நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகிறார். கஜா புயல் முன்னேற்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே பாராட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். குறிப்பாக மின்விநியோகம் விரைவில் கிடைக்கும் வகையில் வெளி மாவட்ட மின் ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்தநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கஜா புயல் நிவாரண நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. 60 ஆண்டுகளாக இல்லாத சேதம். மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின்சாரம் சப்ளை வழங்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் அழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மணமேல்குடி, ஜெகதாபட்டினம், பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டையில் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. இன்றோ நாளையோ அறந்தாங்கியில் மின்சாரம் வழங்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி குடிநீர் வழங்க அறிவுறுத்தி உள்ளோம். தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 200 ஜெனரேட்டர்களை வழங்கி உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான தென்னை, வாழை, தேக்கு, பலா போன்ற மரங்கள் கீழே சாய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
கஜா புயலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சீரமைத்து வருகிறோம். சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் பேசி விவரங்களை கேட்டு வருகிறார். அவரின் உத்தரவின்படி நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று அல்லது நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகிறார். கஜா புயல் முன்னேற்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே பாராட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X