search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்
    X

    செய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

    செய்யாறு அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க கலெக்டர் உத்திரவிட்டார். #GajaCyclone #Gajastorm
    திருவண்ணாமலை:

    வெம்பாக்கம் தாலுகாவில் குடிசை வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அரசு திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளருமான தீரஜ்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி கூறுகையில்:-

    ‘‘செய்யாறு கோட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் சுவர் இடிந்து குடிசை வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமி உயரிழந்துள்ளார். மேலும் அதே குடும்பத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது’’ என்றார். #GajaCyclone #Gajastorm
    Next Story
    ×