search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுவையில் பெரிய சேதம் இல்லை- நமச்சிவாயம் தகவல்
    X

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுவையில் பெரிய சேதம் இல்லை- நமச்சிவாயம் தகவல்

    கஜா புயலை எதிர் கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் புதுவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #gajacyclone #namachivayam #rain

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலை எதிர் கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. பொதுப்பணி, மின், உள்ளாட்சி, தீயணைப்பு, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினர்.

    புயலால் 11 இடங்களில் மரம் விழுந்ததாக புகார் வந்தது. உடனடியாக அந்த பகுதியில் மரங்களை அப்புறப்படுத்தி உள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பெரியளவில் புதுவையில் சேதம் ஏற்படவில்லை.

    காரைக்காலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு அமைச்சர் கமலக் கண்ணன் முகாமிட்டு பணிகளை செய்து வருகிறார்.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் காரைக்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக பிரதான சாலைகளில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    பின்னர் உள்புற சாலைகளில் மரங்களை அகற்றுவோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதை சீரமைக்க புதுவையில் இருந்து 30 பேர் கொண்ட மின்சார குழு காரைக்கால் சென்றுள்ளது. அங்கு கூரை வீடுகள் சேதமடைந்துள்ளது.

    இன்று மாலைக்குள் காரைக்கால் மாவட்டத்தை சகஜநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. ஜென ரேட்டர்களை இயக்கி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    புதுவையிலும் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடர் மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம், தலைமை என்ஜினீயர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    அமைச்சர் நமச்சிவாயம் இன்று காலை வில்லியனூர் தொகுதி முழுவதும் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டார். அப்போது எஸ்.எஸ்.நகர், உத்திரவாகினி பேட் ஆகிய பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கழிவு நீர் வாய்க்காலில் தூர் வாரிய மண் அப்பகுதியிலேயே குவிக்கப்பட்டு இருந்ததை கண்ட அமைச்சர் நமச்சிவாயம் அதனையும் அகற்றுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சர் நமச்சிவாயத்துடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையன் ஆறுமுகம் உடன் சென்றார். #gajacyclone #namachivayam #rain

    Next Story
    ×