search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாசனத்துக்காக பொருந்தலாறு அணை 23-ந்தேதி திறப்பு: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
    X

    பாசனத்துக்காக பொருந்தலாறு அணை 23-ந்தேதி திறப்பு: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

    பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆறு அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முறைப் பாசனம் மூலம் 23-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #PalarPorundalarDam
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆறு அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முறைப் பாசனம் மூலம் 23-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

    இதனால் பழனி வட்டத்திலுள்ள 4162 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami  #PalarPorundalarDam

    Next Story
    ×