search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை அ.தி.மு.க-தி.மு.க. தொடங்கின
    X

    20 தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை அ.தி.மு.க-தி.மு.க. தொடங்கின

    20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டனர். #DMK #ADMK

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்கான பணிகளில் இறங்கி உள்ளனர்.

    இந்த இடைத்தேர்தலுக்கான பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டனர். தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலை சேகரித்து வைத்துள்ளனர்.

    தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க., தி.மு.க. வினர் போட்டி போட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

    சென்னையில் பெரம்பூர் தொகுதியில் உள்ள திரு.வி.க. நகர் பஸ்நிலையம் அருகே உள்ள சுவர்களில் தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னம் வரைந்து வருகிறார்கள். இதேபோல் அ.தி.மு.க.வினர் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சுவர்களில் இரட்டை இலை சின்னம் வரைந்து வருகிறார்கள்.

    தினகரன் கட்சியினரும் சின்னம் வரைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதுபோல் 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலுக்கான வேலைகளில் அ.தி.மு.க.-தி.மு.க. தொண்டர்கள் இறங்கி உள்ளனர். #DMK #ADMK

    Next Story
    ×