என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன்- இயக்குனர் கவுதமன்
Byமாலை மலர்11 Nov 2018 11:03 AM GMT (Updated: 11 Nov 2018 11:03 AM GMT)
எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று டைரக்டர் கவுதமன் தெரிவித்துள்ளார். #Gowthaman #Rajinikanth
சென்னை:
சினிமா டைரக்டர் கவுதமன் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக யார்-யாரோ வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். இதற்காக புதிய அரசியல் கட்சியை தான் தொடங்க உள்ளேன்.
தை பொங்கலுக்கு பிறகு நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பெயரும், கொடியும், கொள்கைகளும் அறிவிக்கப்படும்.
நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மதிப்புமிக்க கலைஞர்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மண்ணை ஆள தகுதி இல்லை. விஸ்வரூபம் படம் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறிய கமல் இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவார்.
ரஜினிகாந்தையும் எப்போதும் ஏற்க முடியாது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.
தொடர்ந்து இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழினம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் எங்களை ஆண்டதும், ஆள நினைப்பதும் இனி ஒரு போதும் நடக்காது.
இவ்வாறு கவுதமன் கூறினார். #Gowthaman #Rajinikanth
சினிமா டைரக்டர் கவுதமன் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக யார்-யாரோ வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். இதற்காக புதிய அரசியல் கட்சியை தான் தொடங்க உள்ளேன்.
தை பொங்கலுக்கு பிறகு நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பெயரும், கொடியும், கொள்கைகளும் அறிவிக்கப்படும்.
நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மதிப்புமிக்க கலைஞர்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மண்ணை ஆள தகுதி இல்லை. விஸ்வரூபம் படம் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறிய கமல் இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவார்.
ரஜினிகாந்தையும் எப்போதும் ஏற்க முடியாது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.
தொடர்ந்து இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழினம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் எங்களை ஆண்டதும், ஆள நினைப்பதும் இனி ஒரு போதும் நடக்காது.
இவ்வாறு கவுதமன் கூறினார். #Gowthaman #Rajinikanth
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X