search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 5,244 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 38 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 99.95 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.01 அடியாக உயர்ந்தது. #MetturDam

    Next Story
    ×