என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான்தான் புதிய தலைவர் என்று கூறி தி.நகர் பா.ஜனதா அலுவலகத்தில் புகுந்த கடலூர் வாலிபரால் பரபரப்பு
Byமாலை மலர்9 Nov 2018 12:21 PM GMT (Updated: 9 Nov 2018 12:21 PM GMT)
தி.நகர் பா.ஜனதா அலுவலகத்தில் புகுந்த கடலூர் வாலிபர், நான்தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்று கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP
சென்னை:
தி.நகர் வைத்தியராம் தெருவில் தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் நேற்று மதியம் மர்ம வாலிபர் ஒருவர் புகுந்தார்.
தமிழக பா.ஜனதாவுக்கு நான்தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்று அவர் கூறினார். அப்போது அலுவலகத்தின் பொறுப்பாளர் ரகுசுந்தர்ராம் அங்கு இருந்தார்.
வாலிபர் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாம்பலம் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் நரேந்திர மாரி என்பது தெரிய வந்தது. கடலூரை சேர்ந்த அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார்.
இதையடுத்து போலீசார் அவரது உறவினர்களை வரவழைத்தனர். விசாரணைக்கு பின்னர் வாலிபர் நரேந்திர மாரி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X