search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்தான் புதிய தலைவர் என்று கூறி தி.நகர் பா.ஜனதா அலுவலகத்தில் புகுந்த கடலூர் வாலிபரால் பரபரப்பு
    X

    நான்தான் புதிய தலைவர் என்று கூறி தி.நகர் பா.ஜனதா அலுவலகத்தில் புகுந்த கடலூர் வாலிபரால் பரபரப்பு

    தி.நகர் பா.ஜனதா அலுவலகத்தில் புகுந்த கடலூர் வாலிபர், நான்தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்று கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP

    சென்னை:

    தி.நகர் வைத்தியராம் தெருவில் தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் நேற்று மதியம் மர்ம வாலிபர் ஒருவர் புகுந்தார்.

    தமிழக பா.ஜனதாவுக்கு நான்தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்று அவர் கூறினார். அப்போது அலுவலகத்தின் பொறுப்பாளர் ரகுசுந்தர்ராம் அங்கு இருந்தார்.

    வாலிபர் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாம்பலம் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவரது பெயர் நரேந்திர மாரி என்பது தெரிய வந்தது. கடலூரை சேர்ந்த அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரது உறவினர்களை வரவழைத்தனர். விசாரணைக்கு பின்னர் வாலிபர் நரேந்திர மாரி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #BJP

    Next Story
    ×