என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்2 Nov 2018 7:21 AM GMT (Updated: 2 Nov 2018 7:21 AM GMT)
தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு- பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தற்போதைய தீர்ப்பில் உள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டு கடந்த காலங்களில் இருந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் அல்லது காலை, மாலை ஆகிய நேரங்களில் கூடுதலான நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்காக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
திடீரென்று புதிய விதிமுறைகளை திணித்து, மக்கள் காலம் காலமாக வழக்கத்தில் கொண்டுள்ள கலாச்சாரத்தை மாற்ற நினைப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மாசுக்கட்டுப்பாடு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, படிப்படியாக விதிமுறைகளை கொண்டு வந்து, மக்களின் மனநிலைக்கு ஏற்ப இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர திடீரென்று கட்டாயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட முன்வரக் கூடாது.
தமிழக அரசும் பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது.
இச்சூழலில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பொது மக்கள் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும். குறிப்பாக பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் நலன் காக்கவும், பண்டிகையின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவும் உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு- பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தற்போதைய தீர்ப்பில் உள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டு கடந்த காலங்களில் இருந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் அல்லது காலை, மாலை ஆகிய நேரங்களில் கூடுதலான நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்காக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
திடீரென்று புதிய விதிமுறைகளை திணித்து, மக்கள் காலம் காலமாக வழக்கத்தில் கொண்டுள்ள கலாச்சாரத்தை மாற்ற நினைப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மாசுக்கட்டுப்பாடு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, படிப்படியாக விதிமுறைகளை கொண்டு வந்து, மக்களின் மனநிலைக்கு ஏற்ப இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர திடீரென்று கட்டாயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட முன்வரக் கூடாது.
தமிழக அரசும் பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது.
இச்சூழலில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பொது மக்கள் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும். குறிப்பாக பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் நலன் காக்கவும், பண்டிகையின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவும் உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X