என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 தொகுதி பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது- திருநாவுக்கரசர்
Byமாலை மலர்30 Oct 2018 2:12 PM GMT (Updated: 30 Oct 2018 2:12 PM GMT)
தேர்தல் பயம் இல்லை என்று காட்டுவதற்காக 20 தொகுதியில் பொறுப்பாளரை அதிமுகவில் நியமித்து உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #ADMK #Congress #thirunavukkarasar
அவனியாபுரம்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தமான நெடுஞ்சாலை, ஒப்பந்த முறைகேட்டில் நடந்த ஊழல் குறித்த தமிழக காவல்துறையினர் கொடுத்த அறிக்கையை தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை செய்ய எடுத்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யக் கூடாது என தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து இருக்க வேண்டும்.
வழக்கு சம்பந்தமான முதல்வர் மீதான குற்றச்சாட்டிற்கு அறிக்கை கேட்டு உள்ளது. இது தற்காலிக நிவாரணம் தான். முதல்வர் தற்போது ஆறுதல் பெற்று இருக்கலாம்.
சட்டமன்றத்தில் வாக்கெடுப்பில் முதல்வருக்கு வாக்களிக்க கொறடா சொல்லியும் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் எதிராக வாக்கு அளித்தனர்.
அவ்வாறு செய்ததால் அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.ஆனால் அ.தி.மு.க.வினர் அவர்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல் முறையீடு செய்தால் இன்னும் கால தாமதம் ஆகும். இந்த தொகுதிகளில் மக்களே தேர்தல் நடத்த விரும்புகின்றனர்.
தமிழகத்தில் பெய்யாத மழையையும், வராத புயலையும் காண்பித்து தோல்வி பயத்தால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.
தீர்ப்பு வந்து 30 நாட்களுக்குள் மேல் மூறையீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் 18 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்க வேண்டும்.
எங்களுக்கு தேர்தல் பயம் இல்லை என்று காட்டுவதற்காக 20 தொகுதியில் பொறுப்பாளரை அ.தி.மு.க.வில் நியமித்து உள்ளனர். டெங்கு, பன்றி காய்ச்சல் 3 நாட்களுக்கு பின் தான் நம்மால் உணர முடியும். இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Congress #thirunavukkarasar
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தமான நெடுஞ்சாலை, ஒப்பந்த முறைகேட்டில் நடந்த ஊழல் குறித்த தமிழக காவல்துறையினர் கொடுத்த அறிக்கையை தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை செய்ய எடுத்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யக் கூடாது என தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து இருக்க வேண்டும்.
வழக்கு சம்பந்தமான முதல்வர் மீதான குற்றச்சாட்டிற்கு அறிக்கை கேட்டு உள்ளது. இது தற்காலிக நிவாரணம் தான். முதல்வர் தற்போது ஆறுதல் பெற்று இருக்கலாம்.
சட்டமன்றத்தில் வாக்கெடுப்பில் முதல்வருக்கு வாக்களிக்க கொறடா சொல்லியும் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் எதிராக வாக்கு அளித்தனர்.
அவ்வாறு செய்ததால் அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.ஆனால் அ.தி.மு.க.வினர் அவர்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல் முறையீடு செய்தால் இன்னும் கால தாமதம் ஆகும். இந்த தொகுதிகளில் மக்களே தேர்தல் நடத்த விரும்புகின்றனர்.
தமிழகத்தில் பெய்யாத மழையையும், வராத புயலையும் காண்பித்து தோல்வி பயத்தால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.
தீர்ப்பு வந்து 30 நாட்களுக்குள் மேல் மூறையீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் 18 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்க வேண்டும்.
எங்களுக்கு தேர்தல் பயம் இல்லை என்று காட்டுவதற்காக 20 தொகுதியில் பொறுப்பாளரை அ.தி.மு.க.வில் நியமித்து உள்ளனர். டெங்கு, பன்றி காய்ச்சல் 3 நாட்களுக்கு பின் தான் நம்மால் உணர முடியும். இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Congress #thirunavukkarasar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X