search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றிபெற முடியாது- அமைச்சர் காமராஜ் பேச்சு
    X

    திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றிபெற முடியாது- அமைச்சர் காமராஜ் பேச்சு

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் காமராஜ் பேசினார். #ministerkaramaj

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் என்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் வரவேற்று பேசினார்.

    முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் கோபி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்தர்ராஜ், நகர்மன்ற துணை தலைவர் வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை. அ.தி.மு.க.வை அழிக்கும் முயற்சி ஒரு நாளும் வெற்றி பெறாது. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணம், ஒரே கனவுகளுடன் இருந்து வருகிறார்.

    ஏழைக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கிய கட்சி அ.தி.மு.க.தான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது.

    முதல்-அமைச்சர் மீது தி.மு.க. போடப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த வழக்கில் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். தி.மு.க.- டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொண்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

    இவ்வாறுஅவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன் வாசுகிராமன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள், மாவட்ட எம்.ஜிஆர், மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், மாவட்ட அண்ணா தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி தமிழ்ச்செல்வன் (மேற்கு) தமிழ் கண்ணன் (கிழக்கு) கோட்டூர் ஜீவானந்தம் (தெற்கு), ராஜா சேட் (வடக்கு), நீடாமங்கலம் அரிகிஷ்ணன் (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    முடிவில் 12-வது வார்டு செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார். #ministerkaramaj

    Next Story
    ×