search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டறம்பள்ளியில் கார் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    நாட்டறம்பள்ளியில் கார் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி

    நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவர் கார் மோதி இறந்தார்.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் அபிநாத் (வயது 15). நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அபிநாத் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் மாணவர் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து காரை ஓட்டிவந்த ஈரோட்டை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவரை கைது செய்தனர்.

    கார் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×