என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளியில் கார் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி
Byமாலை மலர்22 Oct 2018 7:22 AM GMT (Updated: 22 Oct 2018 7:22 AM GMT)
நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவர் கார் மோதி இறந்தார்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் அபிநாத் (வயது 15). நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அபிநாத் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் மாணவர் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து காரை ஓட்டிவந்த ஈரோட்டை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவரை கைது செய்தனர்.
கார் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X