என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெய்வேலி அருகே உல்லாசத்துக்கு வரமறுத்த பெண் மீது தாக்குதல்- வாலிபர் கைது
Byமாலை மலர்20 Oct 2018 11:35 AM GMT (Updated: 20 Oct 2018 11:35 AM GMT)
உல்லாசத்துக்கு வரமறுத்த பெண்ணை சர மாரியாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சுமித்ரா (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் பாபு (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரும் தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சுரேஷ் பாபு நேற்று மதியம் சுமித்ராவிடம் எங்களது வீட்டில் யாரும் இல்லை நீ எனது வீட்டுக்குவா நாம் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்தார். ஆனால் சுமித் ரா வர மறுத்துவிட்டார்.
இதனால் சுரேஷ்பாபு ஆத்திரமடைந்து சுமித்ரா வின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் தனியாக இருந்த சுமித்ராவை சர மாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் சுமித்ரா புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்குபதிவு செய்து சுரேஷ் பாபுவை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X