search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே பிளாட்பாரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - ரெயில்கள் தாமதம்
    X

    வேலூர் அருகே பிளாட்பாரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - ரெயில்கள் தாமதம்

    வேலூர் விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய நடை மேடையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று விரிஞ்சிபுரம் ரெயில் நிலையம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் 1-வது பிளாட்பாரத்தில் மண் ஏற்றி வந்த லாரி எதிர் பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அப்போது, அவ்வழியே ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய மேலாளர் காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர், காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி மீட்கபட்டது.

    இதனால், ஜோலார்பேட்டை மார்க்கமாகச் செல்லும் சங்கமித்ரா, பெங்களூரு, யஸ்வந்த்பூர், திருப்பதி இன்டர்சிட்டி உள்ளிட்ட 8 விரைவு மற்றும் வாராந்திர ரெயில்கள் சுமார் 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

    இந்த விபத்தால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு மேல் சென்னை மார்க்கத்திலிருந்து எந்த ரெயிலும் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    Next Story
    ×