என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
69 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம் - 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்20 Oct 2018 10:20 AM GMT (Updated: 20 Oct 2018 10:20 AM GMT)
வைகை அணை நீர்மட்டம் 69 அடியை நெருங்கி உள்ளதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட உள்ளது. #VaigaiDam
கூடலூர்:
கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் வருசநாடு, வெள்ளிமலை ஆகிய மூலவைகையாறு நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 2762 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.34 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 66 அடியை எட்டியபோது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று மாலை 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 2-வது முறையாக வைவை அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாய அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. 1953 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1977 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 130 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 4.2, தேக்கடி 8, கூடலூர் 13.6, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 8, வைகை அணை 8.4, மஞ்சளாறு 77, சோத்துப்பாறை 16, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகின்றது. #VaigaiDam
கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் வருசநாடு, வெள்ளிமலை ஆகிய மூலவைகையாறு நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 2762 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.34 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 66 அடியை எட்டியபோது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று மாலை 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 2-வது முறையாக வைவை அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாய அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. 1953 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1977 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 130 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 4.2, தேக்கடி 8, கூடலூர் 13.6, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 8, வைகை அணை 8.4, மஞ்சளாறு 77, சோத்துப்பாறை 16, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகின்றது. #VaigaiDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X