என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சபரிமலை செல்லும் பெண் பக்தர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது - திருநாவுக்கரசர்
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆளுங்கட்சியை பயன்படுத்தி ஒருசிலர் இரவில் டிராக்டர் மூலமாக மணல் கடத்துகிறார்கள்.
இதை மாவட்ட கலெக்டர், தாசில்தார் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அடிக்கடி அடித்து துரத்தி விட்டு அவர்களின் படகுகளை எடுத்து சென்று விடுகின்றனர். மீனவர்களையும் கைது செய்கின்றனர். பா.ஜனதா ஆட்சியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
மீனவர்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது பா.ஜனதா. ஆனால் காங்கிரஸ் ஆட்சியின்போது மீனவர்களையும், படகுகளையும் பிடித்து செல்வார்கள். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்களை விடுதலை செய்வார்கள்.
ஆனால் பா.ஜனதா ஆட்சியில் பிடிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட படகுகள் பயனற்று போய்விட்டது. மேலும் ஒருசில படகுகளை மீட்டு கொண்டு வந்தாலும் அதை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்காக மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மீனவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது. மத்திய- மாநில அரசுகளின் ஊழல்கள் பொய்களை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் இந்தமாத இறுதியில் நடத்த இருக்கிறோம்.
சபரிமலையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் சமம் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வருகிற பெண்களை தாக்குவது, கார் கண்ணாடியை உடைப்பது என்று வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி மீது நீதிமன்றம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து அதை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஒரு முதல்-அமைச்சர் மீதே சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் பல அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் முன்பிருந்த ஆட்சியாளர்களை குற்றம் சொல்லி எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதுபோல் பேசுவது சரியானதல்ல. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். தப்பிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #SabarimalaVerdict #Thirunavukkarasar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்