search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட கவர்னர் கிரண்பேடி.
    X
    கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட கவர்னர் கிரண்பேடி.

    கடற்கரையில் குப்பை வீசினால் அபராதம்- கவர்னர் கிரண்பேடி

    கடற்கரையில் குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை குவியல்களுக்குள் சிக்கி கொள்கின்றன.

    மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் (கேரி பேக்குகள்) காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.

    அதோடு கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கலந்து அலங்கோலமாக காட்சி அளிப்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi
    Next Story
    ×