search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-ந்தேதி சேலம் வருகை
    X

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-ந்தேதி சேலம் வருகை

    சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வருகிற 20-ந்தேதி சேலம் வருகிறார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) சேலம் வருகிறார். அவரது வருகையையொட்டி சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதிய பஸ் நிலையம் அங்கம்மாள் காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர், மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் பங்கேற்று பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் 20-ந்தேதி காலையில் விமானம் மூலம் சேலம் வருகிறார். எனவே அவருக்கு மாநகர், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் புறப்பட்டு, கார் மூலம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார்.

    இங்கு கட்சி உறுப்பினர்களுக்கு புதுப்பித்தல் அடையாள அட்டையும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குகிறார்.

    பின்னர் முதல்- அமைச்சர் அங்கிருந்து திரும்பி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்குகிறார். அங்கு வைத்து மாநகர், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து 21-ந்தேதி சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு சென்று அங்கு அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார். அதன் பிறகு சேலத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதையடுத்து கரூர், திருச்சியில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு முதல்-அமைச்சர் சென்னை செல்கிறார்.

    விரைவில் பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இதற்காக அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசினார்.

    இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, தியாகராஜன், சண்முகம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் துரைராஜ், நேதாஜி, சதீஸ்குமார், ராம்ராஜ், செல்வராஜ், முத்துசாமி, ராமசாமி, கேட் மாதேஸ், துணை தலைவர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மண்டல குழு தலைவர்கள் மாதேஸ்வரன், ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் புல்லட் ராஜேந்திரன், கிருபாகரன், பிரகாஷ், தொழிற் சங்க செயலாளர் பால கிருஷ்ணன், துணை தலைவர் ஜான்கென்னடி, முன்னாள் அவை தலைவர் முகமது உசேன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×