என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 6½ கிலோ தங்க கட்டி பறிமுதல்
Byமாலை மலர்15 Oct 2018 9:20 AM GMT (Updated: 15 Oct 2018 9:20 AM GMT)
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 6½ கிலோ தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirPort
ஆலந்தூர்:
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் 6½ கிலோ தங்க கட்டி கேட்பாரற்று கிடந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இந்த விமானம் துபாயில் இருந்து டெல்லி வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது. எனவே துபாயில் இருந்து வந்த பயணிகள் யாரேனும் தங்கத்தை கடத்தி வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விமானத்திலேயே தங்க கட்டியை மறைத்து வைத்து தப்பி சென்று உள்ளனர்.
இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இருக்கையில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். #ChennaiAirPort
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் 6½ கிலோ தங்க கட்டி கேட்பாரற்று கிடந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இந்த விமானம் துபாயில் இருந்து டெல்லி வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது. எனவே துபாயில் இருந்து வந்த பயணிகள் யாரேனும் தங்கத்தை கடத்தி வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விமானத்திலேயே தங்க கட்டியை மறைத்து வைத்து தப்பி சென்று உள்ளனர்.
இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இருக்கையில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். #ChennaiAirPort
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X