search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது
    X

    தங்கம் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,176-க்கு விற்பனையாகிறது. #gold
    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உச்ச கட்டமாக கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 64-க்கு விற்றது.

    அதன்பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.248 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 176 ஆக உள்ளது. இதன்மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது.

    கிராமுக்கு ரூ.31 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,022-க்கு விற்கிறது. அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. அதைதொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    அதன் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு காரணமாகவும், திருமண முகூர்த்தம் மற்றும் தீபாவளி பண்டிகை போன்றவற்றாலும் தங்கத்தின் தேவை அதிகரித்தது. அதனால் விலை உயருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ. 41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கிறது. #Gold
    Next Story
    ×