search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோதல் வழக்கில் கருணாசுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை
    X

    மோதல் வழக்கில் கருணாசுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

    பூலித்தேவன் நினைவிடத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கருணாசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. #KarunasMLA
    மதுரை:

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மோதல் வெடித்தது. இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கருணாசை கைது செய்வதற்கு சமீபத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.



    இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரை கருணாசை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் எனக் கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கருணாசுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாசை காவல்துறை இப்போது கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிப்பதாக கூறினார். #KarunasMLA
    Next Story
    ×