search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரியில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்.
    X
    தருமபுரியில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்.

    பேராசிரியர் நியமனத்திலும் ஊழல்: தருமபுரியில் பரபரப்பு போஸ்டர்கள்

    பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. #Scam
    தருமபுரி:

    பல கோடி வாங்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டினார்.

    தற்போது பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.

    இந்த அமைப்பின் சார்பில் தருமபுரி நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்க்ள ஒட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழக ஆளுனரே, உயர் கல்வி துறையே, பேராசிரியர் நியமனத்தில் தொடரும் முறைகேடுகள், முறைகேடாக நடந்த பணி நியமனத்தை ரத்து செய்.

    தமிழ்நாடு அரசு உதவி-மானியம் பெறும் கல்லூரிகளில் தொடரும் ஆசிரியர் நியமனத்தில் விற்பனை-இடஒதுக்கீடு முறைகேடுகள்.

    முறைகேட்டுக்கு தமிழக அரசு, உயர்கல்வி துறை, கல்லூரி கல்வி இயக்குனர், இடை இயக்குனர் என அனைவரும் ஒப்புதல்.

    2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இடஒதுக்கீடு நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிடு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Scam



    Next Story
    ×