search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் மழை
    X

    நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் மழை

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.#Rain

    நெல்லை:

    தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை கொட்டியது. செங்கோட்டை, குற்றாலம், அம்பை, பாளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 33 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    பாபநாசம், குற்றாலம், களக்காடு மலைப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 104.65 அடியாக இருந்தது. இன்று இது 105.30 அடியாக அதிகரித்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.


     

    118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது. இதேபோல 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 63அடியாகவும், 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 53.50அடியாகவும், 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.39 அடியாகவும் உள்ளன.

    36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நிரம்பியது. பின்னர் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்னீர் திறந்து விடபப்ட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் இந்த அணை மீண்டும் நிரம்பியது. இதேபோல 23.60 உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை ஏற்கனவே தென்மேற்கு பருவம்ழையினால் நிரம்பியது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 21.31 அடியாக இருந்தது. இன்று இந்த அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

    50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை 20 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 83 அடியாகவும் உள்ளன.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் நேற்று முன்தினம் மாலையில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்ருலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபப்ட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை வெள்ளம் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபப்ட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மழை கொட்டியதால் அருவிகளில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இன்று காலையும் அருவிகளில் அதிகளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தான்டி மழை தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் பயிர்கள் முளைவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #Rain

    Next Story
    ×