என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமானத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
Byமாலை மலர்4 Oct 2018 10:10 AM GMT (Updated: 4 Oct 2018 10:10 AM GMT)
சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த விமானத்தில் கடத்த முயன்ற ரூ.12 லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த சுரேந்திரன், ராஜ்குமார் ஆகியோரது சூட்கேசில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுரேந்திரன், ராஜ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்பின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர் சூட்கேசில் ரகசிய அறை அமைத்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தங்ககட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முகமது ஆரிப் முதலில் துபாயில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்து இருக்கிறார். பின்னர் அங்கிருந்து இந்தூர் சென்று சென்னைக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. #tamilnews
சென்னையில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த சுரேந்திரன், ராஜ்குமார் ஆகியோரது சூட்கேசில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுரேந்திரன், ராஜ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்பின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர் சூட்கேசில் ரகசிய அறை அமைத்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தங்ககட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முகமது ஆரிப் முதலில் துபாயில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்து இருக்கிறார். பின்னர் அங்கிருந்து இந்தூர் சென்று சென்னைக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X