search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை - ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை - ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்தது.

    மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.  #Hogenakkal #Cauvery
    Next Story
    ×