என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது
குள்ளனம்பட்டி:
ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி டி.எஸ்.பி. ஆனந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர் தவுடர் நிஷா, சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் பிரிவில் நேற்று இரவு அவர்கள் வாகன தணிக்கையில் இருந்தபோது ஆந்திர பதிவு எண் கொண்ட ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காருக்குள் 60 கிலோ எடை கொண்ட 2 மூட்டை கஞ்சா இருந்தது தெரிய வந்தது. காரை ஓட்டியவர் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த உகம்சந்த் குமாவத் (வயது 33) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கள்ளத்தனமாக கஞ்சாவை கடத்தி விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட உகம்சந்த் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. #arrest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்