search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பாளையம் அருகே  குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது - 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    டி.என்.பாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது - 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    டி.என்.பாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Dam #Floodwarning

    டிஎன்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி விளாங்கோம்மை, மல்லியம்மன் துர்க்கம், கம்மனூர், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

    இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. விநாடிக்கு ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்ததால் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது.

    எனவே உபரிநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வினோ பாநகர், கொங்காரபாளையம், தோப்பு, கோவிலூர் வாணிப்புத்தூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் கால்நடைகள் மேய்க்கவோ. வேறு தேவைகளுக்காகவோ யாரும் இறங்க வேண்டாம் என்றும், கரையோரம் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குண்டரிப்பள்ளம் அணை தூர் வாரப்படாததால் அணையில் அதிகளவு நீர் தேக்கமுடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வீணாக பவானி ஆற்றில் கலப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் உபரிநீர் ஓடையில் 2 அல்லது 3 தடுப்பணைகள் கட்டவேண்டும் என்றும் அவ்வாறு கட்டினால் வீணாக பவானி ஆற்றில் கலக்கும் தண்ணீரை அதிகளவு சேமிக்க முடியும் என்றும் அவ்வாறாக சேமிக்கும் பட்சத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். #Dam #Floodwarning

    Next Story
    ×