search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்களை சீண்டிப்பார்த்தால் திமுகவின் ஊழல்களை வெளிப்படுத்துவோம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X

    எங்களை சீண்டிப்பார்த்தால் திமுகவின் ஊழல்களை வெளிப்படுத்துவோம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    எங்களை சீண்டிப் பார்த்தால் தி.மு.க.வின் ஊழல்களை வெளிப்படுத்துவோம் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #TNMinister #RajendraBalaji #ADMK #DMK
    விருதுநகர்:

    இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக விருதுநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    அமைச்சர் கே.டி.ராஜேந் திர பாலாஜி பேசியதாவது:-

    இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் செய்த துரோகங்களை நாங்கள் பட்டியலிட்டு பிட் நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி இருக்காது இயங்காது என்று எண்ணியவர்களின் கனவு நிறைவேறவில்லை.

    அ.தி.மு.க.வில் பிளவு என்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். ஆனால் தி.மு.க. வில்தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    எங்கள் மீது வீண் பழியை சுமத்தினால் நாங்கள் எப்படி சும்மா இருப்போம். நாங்கள் விசிலடித்து கட்சிக்கு வந்தவர்கள். எங்களை சீண்டி பார்த்தால் உங்கள் ஊழல், துரோகங்களை கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் எடுத்து சொல்வோம்.

    2 லட்சம் இலங்கை தமிழர்களை சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம். அதற்கு உதவி செய்த அரசு அன்றைக்கு இருந்த காங்கிரஸ், தி.மு.க. அரசு. கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று கருணாநிதி கூறியிருந்தால் ஈழத்தில் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள்.

    தி.மு.க.வின் தமிழின துரோகத்தை தலைமுறைக்கும் தமிழக மக்கள் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள். இதனை மறைக்கும் விதமாக அ.தி.மு.க. ஆட்சி மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறிவருகிறார்.

    எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல தி.மு.க.விற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

    இந்திய வரலாற்றில் ஊழலுக்கு ஆட்சி கலைக்கப்பட்டது என்று சொன்னால் அது தி.மு.க. ஆட்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதை யாராலும் மறுக்க முடியுமா? எங்களை விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது.

    ஆர்.கே.நகர் போன்று திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் நாங்கள் ஏமாற மாட்டோம். ஏமாற்ற விடவும் மாட்டோம். திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

    அ.தி.மு.க.வின் பேஸ் மட்டம் வெயிட்டாக உள்ளது. பில்டிங்கில் ஒரு கிராஸ் அடிக்கும். அதை நாங்கள் சரி செய்து விடுவோம். தி.மு.க.வில் பில்டிங் நன்றாக இருந்தாலும் பேஸ்மட்டம் மிகவும் வீக்காக உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கைவந்த கலை. மக்கள் எங்களுக்கு ஓட்டுப்போட தயாராக உள்ளனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கூட்டிய போதிலும் தமிழகத்தில் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வரிடம் கோயம்பேடு மார்க்கெட்டில் கருணாஸ் கடை கேட்டார். ஏலத்தில்தான் எடுக்க முடியும் என்று முதல்வர் கூறியதால் கோபப்பட்டு ஆட்சிக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார். தமிழக மக்கள் என்றும் அ.தி.மு.க. அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #RajendraBalaji #ADMK #DMK
    Next Story
    ×