என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சூலூரில் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 33½ பவுன் நகை - ரூ. 15 லட்சம் கொள்ளை
சூலூர்:
சூலூர் சிந்தாமணிப்புதூர் வி.ஐ.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார்(வயது 44). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (42). இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று பிரதீப்குமார் மற்றும் கவிதா ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மகள் கல்லூரிக்கு சென்று விட்டார்.
கவிதா மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 33½ பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து கவிதா சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கணவன்-மனைவி வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Robbery
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்