search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு தொழிலாளி கொலை - மகள் கைது
    X

    காரைக்குடியில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு தொழிலாளி கொலை - மகள் கைது

    காரைக்குடியில் மது குடித்து வந்து அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகள், தந்தையின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தார். #Murder

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கணேசபுரத்தில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 65). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    மகள்கள்-மகன்களுக்கு திருமணமான நிலையில் மூத்த மகள் கற்பகவள்ளி (40) கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக பிச்சை அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மகளிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்றும் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்த பிச்சை, கற்பகவள்ளியிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் பிச்சை போதையில் தூங்கினார். ஆனால் ஆத்திரம் அடங்காத கற்பகவள்ளி அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி நள்ளிரவில் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த பிச்சை தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து பிச்சை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து கற்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை கொலை செய்த கற்பகவள்ளி மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    தந்தையின் குடிப்பழக்கத்தால் மகள் கொலையாளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Murder

    Next Story
    ×