என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உத்தமபாளையம் அருகே 18-ம் கால்வாயில் ரேசன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற கும்பல்
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்த போதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.
அரசு பஸ், கூலித்தொழிலாளர்கள் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் ரேசன் அரிசிகளை கடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 18-ம் கால்வாய் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டதால் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது.
இப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடந்தன. அவ்வழியே சென்ற விவசாயிகள் இதனை கண்டு சோதனை செய்து பார்த்தபோது அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற கும்பல் போலீசாருக்கு பயந்து மூட்டைகளை வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம் கோம்பை பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி வினியோகம் சீராக இல்லை. இந்த நிலையில் கேரளாவுக்கு நாள்தோறும் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
எனவே உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்