search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்?- ஜவாஹிருல்லா கண்டனம்
    X

    பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்?- ஜவாஹிருல்லா கண்டனம்

    தனிப்படைகள் அமைக்கப்பட்டபோதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். #hraja #bjp

    கோபி:

    கோபியில் த.மு.மு.க. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை திணித்துள்ளது. முத்தலாக் குறித்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

    மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் நாடாளுமன்ற மாண்புகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறையின் பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை.

    அதேபோல் மனைவி புகார் அளித்தால் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதினால் குடும்பங்கள் சீர் குலைந்து விடும். இதனால் பெண்கள் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தான் இந்தியாவில் அதிகமாக இருப்பார்கள்.

    சிவில் சட்டத்தில் இருந்த திருமண பந்தத்தை கிரிமினல் சட்டத்தில் கொண்டு வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எச்.ராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவது போலீசாருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது. உடனடியாக எச்.ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியுள்ளது.

    அதற்கு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை அடையும். அதற்கு பெட்ரோல்- டீசல் விலை உயர்வு காரணமாக அமையும். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாததால் தமிழகத்தில் நடைபெறுவது பாரதிய ஜனதாவின் பினாமி ஆட்சி என்பதை காட்டுகிறது.

    இலங்கை போர் குற்றம் என தி.மு.க. மீது அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த வி‌ஷயத்தில் தி.மு.க. வை குற்றம் சொல்ல அ.தி.மு.க. விற்கு எந்த அருகதையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #bjp

    Next Story
    ×