search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசிய பாதுகாப்பு மாநாடு- திருமாவளவன் தகவல்
    X

    திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசிய பாதுகாப்பு மாநாடு- திருமாவளவன் தகவல்

    விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்த உள்ளோம் என்று விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசினார். #thirumavalavan #vck

    விழுப்புரம்:

    மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அகில இந்திய ரீதியில் சனாதன அமைப்பை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நான் மட்டும் சமரசம் இல்லாமல் எதிர்க்கிறோம். மாயவதியோ, ராம் விலாஸ் பஸ்வானோ எதிர்க்கவில்லை. விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்த உள்ளோம். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ள அழைப்பு விடுப்போம். ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளித்த புதுவை முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #thirumavalavan #vck

    Next Story
    ×