search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்- வாலிபர் கைது
    X

    காரைக்காலில் திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம்- வாலிபர் கைது

    திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்கால்:

    காரைக்கால் நிரவி கிராமத்தில் உள்ள அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரசன்(வயது 33). இவர் எலெக்ட்ரிசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது தெருவில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு வந்த 23 வயது இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகி வந்துள்ளார். அதனை நம்பி அந்த இளம்பெண், சரசனிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால், கர்ப்பமான அந்தப்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், சரசன் திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துள்ளார்.

    இதனால் கோபமான அந்தப்பெண் நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் சரசன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், நிரவி போலீசார் வழக்குபதிவு செய்து சரசனை கைது செய்தனர்.
    Next Story
    ×