என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி மலையில் ரெயில் கட்டணம் இருமடங்கு உயர்வு
Byமாலை மலர்22 Sep 2018 10:28 AM GMT (Updated: 22 Sep 2018 10:28 AM GMT)
ஊட்டி மலையில் ரெயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. #OotyTrain
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. பழமை வாய்ந்த மலை ரெயிலை யுனஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இதனையொட்டி சேலம் கோட்ட ரெயில்வேத்துறை சார்பில் சுற்றுலா திரு விழாவை யொட்டி உலக பாரம்பரிய தினம் மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி ரெயில் நிலையங்களில் கடந்த 16-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்காக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் ஜொலிக்கிறது.
இந்நிலையில் குன்னூர்- ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க ஒரு நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி- குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் அக்டோபர் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #OotyTrain
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. பழமை வாய்ந்த மலை ரெயிலை யுனஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இதனையொட்டி சேலம் கோட்ட ரெயில்வேத்துறை சார்பில் சுற்றுலா திரு விழாவை யொட்டி உலக பாரம்பரிய தினம் மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி ரெயில் நிலையங்களில் கடந்த 16-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்காக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் ஜொலிக்கிறது.
இந்நிலையில் குன்னூர்- ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க ஒரு நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி- குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் அக்டோபர் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #OotyTrain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X