என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் கைதான முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
Byமாலை மலர்21 Sep 2018 11:21 AM GMT (Updated: 21 Sep 2018 11:21 AM GMT)
அமைச்சர் தங்கமணி பற்றி அவதூறு பரப்பியதாக கைதான முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
அமைச்சர் தங்கமணியை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி வாட்ஸ்-அப்பில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி சரஸ்வதியை கைது செய்தனர்.
இவர் மீது 505 (பி) பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், 153- ஆத்திரம், கோபம் ஏற்படும் வகையில் தகவல் பரப்புதல், 194(பி)-அசிங்கமாக திட்டுதல், 504- கோபமாக பொதுமக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் பேசுதல், 506(1)-கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, நீதிமன்றத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவையும், தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய கருணாசையும் கைது செய்ய முடியாத நிலையில், வாட்ஸ்-அப்பில் பொய்யான தகவல் பரப்பியதாக கூறி பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தலைமையிடத்தில் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அமைச்சர் தங்கமணியை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.சரஸ்வதி வாட்ஸ்-அப்பில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி சரஸ்வதியை கைது செய்தனர்.
இவர் மீது 505 (பி) பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல், 153- ஆத்திரம், கோபம் ஏற்படும் வகையில் தகவல் பரப்புதல், 194(பி)-அசிங்கமாக திட்டுதல், 504- கோபமாக பொதுமக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் பேசுதல், 506(1)-கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, நீதிமன்றத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜாவையும், தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய கருணாசையும் கைது செய்ய முடியாத நிலையில், வாட்ஸ்-அப்பில் பொய்யான தகவல் பரப்பியதாக கூறி பொய் வழக்கு போட்டு தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து தலைமையிடத்தில் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X